அவளின் மகத்துவம்

அவள் பூச்செடிக்குத்தான்
நீரூற்றினாள்
பூமியெங்கும் மழை பெய்தது
அந்தப் பூவை
பிறந்த போதுதான்
பூமிக்கு புதிதாய்
பொட்டு கிடைத்தது
அவள் நாவை
திறந்தபோதுதான்
பூங்குயிலுக்கு புதிதாய்
மெட்டு கிடைத்தது
அவள் தானமிடும்
சிற்காசுகளெல்லாம்
பொற்காசுகளாய் மாறியது
பிச்சைகாரன் தட்டில்
அவள் தோசை
வார்க்கும்போது மட்டும்
பௌர்ணமி வந்து சென்றது
வீட்டிற்க்குள்
அவள் வாய்மொழி
கேட்டபோதுதான்
என் தாய்மொழியின்
மகத்துவம் அறிந்தேன்