உள்ளத்தைப் பிளக்கின்ற அம்பை

உள்ளத்தைப் பிளக்கின்ற அம்பை நீ
இன்று ஏன் எய்திட்டாய்
என் இதயத்தை பிழிகின்ற செயலை
அன்பே ஏன் செய்திட்டாய்
என் உள்ளத்தை பிளக்கின்ற அம்பை நீ
இன்று ஏன் எய்திட்டாய்

பொய்யில்லா பேச்சுக்கள் உனது
இன்றேன் நீ பொய் சொல்கிறாய்
மெய் தீண்டும் வார்த்தைகள் உனது
இன்றேன் நீ என் உயிர் கொய்கிறாய்
உன் வார்த்தை....
சுடும் வார்த்தை....
என்னையேன் உன் வார்த்தை கொண்டு
உயிரோடு கொல்ல இன்று எய்திட்டாய் அம்பு

பந்தமாய் உனையெண்ணிக் கிடந்தேன்
பாசமாய் நீ உருக்கினாய்
சொந்தமாய் நானுன்னை நினைக்க‌
சொந்தம் நீ இல என்கிறாய்
வஞ்சித்தா..ய்
வஞ்சித்தா..ய்
மண்ணுக்குள் எனைத்தள்ளி விட்டாய்
உயிரோடு எரித்து ஏன் ஏமாற்றி விட்டாய்

மயக்கத் தில் எனை ஆழ்த்தி விட்டு
வெகுதூரம் சென்றிட்டதேன்
கலக்கத்தில் பிதற்றி நானிருக்க‌
துன்பத்தீ என்மேல் வைத்திட்டதேன்
உடல் எரிந்தாலும்..ம்
காதல் அழியாது...
சொர்க்கத்தில் உனையெண்ணி இருப்பேன்
நீவாழ்ந்திடவே பாட்டுக்கள் படிப்பேன்
என்காதல் இருக்கின்ற வரைக்கும்
உன் வாழ்வு தழைக் கட்டும் பெண்ணே

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (5-Sep-16, 8:15 am)
பார்வை : 454

மேலே