தேன் மகள்

ஈக்களெல்லாம்
பூக்களை மொய்க்காது
அவள் பொன்னகையை மொய்க்கின்றன

பூக்களெல்லாம்
ஈக்களை ராசிக்காது
அவளின் புன்னகையை ரசிக்கின்றன

புயலாய் வந்த காற்று
அவளைத் தீண்டியதும்
தென்றலாய் மாறுகின்றது
தென்றலாய் மாறிய காற்று
குளிரடையும்போது தேனாய் மாறுகின்றது

தேனீ தேனடை கட்டுமிடம்
சங்கீதக் காட்டில்
இந்த ராணி மாவாடை சுடுமிடம்
சமையல் கட்டில்

இவள் பூப்பெய்திய பிறகுதான்
பூக்களே புன்னகை எய்தின

இவள் புன்னகைக்கும்போதெல்லாம்
அவள் புன்னகை கருத்துப்போனது
தன் மதிப்புக்கண்டு வெறுத்துப்போனது

இவள் உலக அழகிகளுக்கெல்லாம்
கிலியை உண்டாக்கும் கிளியோ பாட்ரா

இவளின் பாதம் பட்ட மண் தான்
அமீபாவிற்கு அமுத சாதம்

இவள் பட்டு ஆடை அணியும்
சிட்டு
இவளைக் காதலித்து கரம்பிடிக்க
கொடுக்கவேண்டும் சீட்டு

அவளைக் கண்டபிறகுதான்
அறிந்தேன்
மனதிற்கு மகிழ்வூட்டும்
அனைத்தும்
அழகு என்று ..

ராமன் வில்லை
வளைத்திருக்கமாட்டார்
சீதைக்கு பக்கத்தில்
அவள் இருந்திருந்தால்

அவளைக்கண்ட மனிதருக்கு
மயிலைப் பிடிப்பதில்லை

அவளைக்கண்ட மலருக்கு
மமதை பிடிப்பதில்லை

எழுதியவர் : குமார் (5-Sep-16, 3:56 pm)
பார்வை : 372

மேலே