கவியோடு தினம்வாழுவேன்
இனிநாளும் புதிதாக இசைபாடும் குயிலாக
***இனியேனும் மனம்மாறுவேன் !
தனியாக இருந்தாலும் தடுமாறித் தவியாமல்
***தமிழ்ச்சோலை தனில்கூடுவேன் !
கனிவோடு புகழ்கூறி கணநாதன் அருள்நாடி
***கவியோடு தினம்வாழுவேன் !
நுனிநாவில் கலைவாணி நொடியேனும் நடமாட
***நுதிபாடி ஜதிகூறுவேன் !!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
