ஊனம்
கண் தெரியாதவர்
- நான் தோற்றத்தை பார்த்து ஏமாந்தது கிடையாது..
காது கேளாதவர்
- நான் ஒட்டு கேட்டதே கிடையாது...
வாய் பேசாதவர்
- நான் பொய் பேசியதே கிடையாது..
குள்ளமானவர்
- நான் யார் முன்னும் தலை குனித்து நின்றது கிடையாது..
கை இல்லாதவர்
- நான் யார் குறையையும் பார்த்து கை கொட்டி சிரித்தது கிடையாது..
கால் இல்லாதவர்
- நான் காசு பணம் வந்ததும் கால் மேல் கால் போடுவது இல்லை...
அதனால் தான்
எங்களை மாற்றுத்திறனாளி என்கிறார்கள்..
நீயோ ஊனம் என்கிறாய்....!