ஊனம்

கண் தெரியாதவர்
- நான் தோற்றத்தை பார்த்து ஏமாந்தது கிடையாது..

காது கேளாதவர்
- நான் ஒட்டு கேட்டதே கிடையாது...

வாய் பேசாதவர்
- நான் பொய் பேசியதே கிடையாது..

குள்ளமானவர்
- நான் யார் முன்னும் தலை குனித்து நின்றது கிடையாது..

கை இல்லாதவர்
- நான் யார் குறையையும் பார்த்து கை கொட்டி சிரித்தது கிடையாது..

கால் இல்லாதவர்
- நான் காசு பணம் வந்ததும் கால் மேல் கால் போடுவது இல்லை...

அதனால் தான்
எங்களை மாற்றுத்திறனாளி என்கிறார்கள்..
நீயோ ஊனம் என்கிறாய்....!

எழுதியவர் : செல்வமணி (15-Sep-16, 1:09 am)
Tanglish : oonam
பார்வை : 220

மேலே