ஒற்றை மின்னல்

எது கொண்டும்
திறக்க இயலாத மௌனம்
உன்னுடையது.

இடைவெளியற்று அலையும்
உன் பார்வைகளோ...

அலைகளடங்கிய நீர்ப்பெருக்கின்
நெரிசலால் தளும்புகிறது.

மிதந்து படியும் உன்சொற்கள்
மெல்லக் கீழிறங்குகிறது
துயரத்தின் கனம் தாளாமல்.

சுருண்ட பூனையாகி...
ஞாபகங்களின் வலியோடு
அரவமின்றி அலைகிறது
உனது நாட்களின் பயணம்.

மலராகி சரிந்த
உனது புருவ நெரிப்புகள்...
இன்று விரிசல்களாகிவிட

அதன் விளிம்புகளில்
நான் அறிந்தது
உனது அடையாளங்களையல்ல.

காலத்தின் எச்சம்
நிழல்களிலிருந்தும் முகம் தரக்கூடும்...
எனும்

அதீத நம்பிக்கையை
உனக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.

நீயும் அறியாமல்
தளும்பும்
உன் கண்களின் மழையில்...

உன்னையும், என்னையும்...

உயிர்க்க வைக்கிறது
ஓர் ஒற்றை மின்னல்.

எழுதியவர் : rameshalam (17-Sep-16, 12:08 pm)
சேர்த்தது : rameshalam
Tanglish : otrai minnal
பார்வை : 100

மேலே