நிலவே நீ நலமா

நிலவே நீ நலமா
நினைவே நீ சுகமா
நிதமும் உன்னை ரசிப்பேன்
நிழலாய் உன்னைத் தொடர்வேன் !

கனவில் நித்தம் வந்தாய்
கனிந்து முத்தம் தந்தாய்
களவு போன நெஞ்சில்
கவியாய் நீயே நிறைந்தாய் !

மலரின் அழகைப் பூண்டாய்
மழையின் குளுமை கொண்டாய்
மரத்தின் பண்பாய் உறைந்தாய்
மனத்தில் மதுவாய் இனித்தாய் !

கிளியாய்க் கொஞ்சிப் பேசி
கிளிஞ்சல் போலே சிரித்து
கிழிந்த மனத்தைத் தைத்தாய்
கிறுக்குப் பிடிக்க வைத்தாய் !

வனிதை உந்தன் மௌனம்
வருத்தம் கொள்ளச் செய்யும்
வசந்த ராகம் மீட்டி
வடிவாய் வருவாய் அன்பே !

உளத்தில் காதல் பூக்க
உரிமை யாலே அழைத்தேன்
உண்மை யன்பின் வாசம்
உணர்ந்து வாராய் கண்ணே !

இதயம் முழுதும் உன்னை
இளமைத் துடிப்பால் நிரப்பி
இனிதே காதல் கொள்வேன்
இரவும் பகலும் காப்பேன் !

எழுதியவர் : ராஜ லட்சுமி (20-Sep-16, 12:34 pm)
சேர்த்தது : rajipappa
Tanglish : nilave nee nalamaa
பார்வை : 188

மேலே