தினம் ஒரு காதல் தாலட்டு - தனிமை 85= 230
“தளுக்கு சுந்தரி மினுக்கி வர்றா தங்க விக்ரமா – அவ
தள தளக்கும் மேனியிலே ஜிகினா மினுக்குதுப் பார்…!
எந்த ஊரூன்னு கேட்டு தெரிஞ்சிக்கலாம் வாங்கடா மச்சிகளா
அவ தின்ன வாங்கியாங்கடா கூடை நிறைய பஜ்ஜிகளா…!”
எஸ் கீயூஸ் மீ..! இந்தா பஜ்ஜி சாப்பிடுங்கோ..
நோ – தேங்ஸ்..
அட கொஞ்சம் சாப்பிடுங்கோ…
ஏ – மிஸ்ட்டர் ! வேண்டாம்ன்னா விடேன்…
அட கிராக்கி பண்ணாதீங்க.., ஒண்ணாவது சாப்புடுங்க..!
( வாங்கி வீசி எறிகிறாள் )
டேய்..! கொழந்தைக்கு கோவத்தைப் பார்றா….!
கோவமா.. ?அது வரப்படாதே….!
கோவம் வந்தா என்ன பண்ணனும் தெரியுமா…?
ஓ.. தெரியுமே…!
எங்க சொல்லு பாக்கலாம்..!
கோ… கோ… கோ… கோ…
அட சொல்லித் தொலையுடா தொத்து வாயா…!
கோ… கோ.. கோ…
என்ன கோழி பீய்ல கைய்ய விடனுமா…? அட ச்சீ…!
“தளுக்கு சுந்தரி மினுக்கி வர்றா தங்க விக்ரமா – அவ
தள தளக்கும் மேனியிலே ஜிகினா மினுக்குதுப் பார்…!
எந்த ஊரூன்னு கேட்டு தெரிஞ்சிக்கலாம் வாங்கடா மச்சிகளா
அவ தின்ன வாங்கியாங்கடா கூடை நிறைய பஜ்ஜிகளா…!”
கட்டுவிரியன் பாம்பு போல ஒடம்பு
கட்டு கட்டாய் மெருகேறி இருக்கு
தவமாய் தவமிருந்தானோ உங்கப்பன்
உன்னை வரமாக தந்தானோ பிரம்மன்
சிற்றெறும்பு கடிச்சாலே சிலுக்கும் மேனி – இந்த
சிங்காரன் கைப்பட்டாலே வலிக்குதோடி..?
தொட்டாலே பாய்போடும் பந்தம்
நமக்குள் விரைவாக உருவாக வேண்டும்..!
கைய ரொம்ப நீட்டாதே
கை விரலே இருக்காது
வாய ரொம்ப சுளுக்காதே
வாயில பல்லே இருக்காது
பொம்பளன்னா அடக்கம் வேணும்
அடங்கலனா அடங்க வைப்போம்
இனி மேலாவது திரிந்திக்கோ
போன போற பொழைச்சிப்போ
தளுக்கு நடைய சுருக்கிக்கோ
தங்க முத்தமொண்ணு கொடுத்துப்போ…!