புத்தனென அறிவிப்பேன் -சந்தோஷ்

மெளனமாக இருந்துவிடுவதில்
ஒரு பெரும் சுகமிருக்கிறது
தியானம் செய்வதை விட
மெளனம் என்னுள் பெரும்
அஹிம்சைச் சுவரை கட்டியெழுப்புகிறது.

இன்னும் சில நாட்களில்
நான் புத்தனெனவும்
அறிவித்துக் கொள்வேன்.

இதோ அதற்கான
ஆயுத்தமாக ஆதிமரமொன்றை
போதிவிதையென
சுமந்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனாலும் ஓர் ஆசை...
இந்த பிரபஞ்சம் சுமந்திருக்கும்
அத்துணை ஆசை நதிகளையும்
என் ஏக்கத் தொண்டை நனைய
குடித்திட பெரும் தாகமெனக்கு...!

ஆம்.. ஆம்...!
இன்னும் நான் முழுவதுமாய்
சித்தார்த்தனாகவே
வாழ ஆரம்பிக்கவில்லையே !

**
-- இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (1-Oct-16, 7:31 pm)
பார்வை : 68

மேலே