பூமியின் அனுபவங்கள்

*
நிஜங்களின் நிழல்
நீட்டிய கரங்களில்
பொய்மைக்கு
போஜனமில்லை!
*
கரையை தொட முடியாத
அலைகளுக்கு
நதியின் ஆறுதல்!
*
கடலோடு கரையும்
ஒரு துளி
எங்கோ ஜனித்திருக்கிறது!
*
ஒரு நதியின் பயணத்தில்
சிறு சிறு தங்கல்கள்
சில தடம் மாறல்கள்
பின் கூடுகைகள்.
*
பயணங்கள் முடிவதில்லை,
கடலில் சங்கமிக்கும் போதும்...
*

எழுதியவர் : செல்வமணி (1-Oct-16, 8:09 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 213

சிறந்த கவிதைகள்

மேலே