அவள் நினைவைச் சுமந்த நெஞ்சம்

அவள் நினைவைச் சுமந்த நெஞ்சம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நெஞ்சம் அவள் நினைவைச் சுமந்திருக்கும் - அதில்
கொஞ்சும் அழகு முகம்
பொதிந்திருக்கும் - உயிர்
காதலிலே என் இதயம்
மலர்ந்திருக்கும் - கண்கள்
ஆவலிலே அன்பு முகந்தேடி 
அலைந்திருக்கும் -அவள்
வரவுக்கென்றே மனவாசல்
திறந்திருக்கும் - நீளும்
பார்வை வழித் தடத்தில்
பதிந்திருக்கும் - மன
பாரத்தால் சுவாசக் காற்றும்
கரைந்திருக்கும் !

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (5-Oct-16, 9:29 pm)
பார்வை : 380

மேலே