நீயும் நானும்

நீயும் நானும்...

என் உயிரே உன் உடல் உயிரென நான் இருப்பேன்
அன்பே...
என் மூச்சே உன் மூச்சிலும் நான் இருப்பேன்
அழகே...
நிலவே உன் காதலில் நான் உறங்கிட வேண்டும்
நிரந்தமாய்...
கண்ணே உன் விழிமொழியினை அறிந்திட வேண்டும்
யுகம் யுகமாய்...
சிறு சிறு தவறுகள் குற்றமில்லை
திருந்திட வாய்ப்புகளே தராத
உன் மெளனங்களே குற்றமடி…
அழகே! என்னோடு உனக்கேன்ன கோபம்
உன் நிழலாய்...நான் அல்லவா…
நீ எரித்தால் நான் மறைந்திடுவேனோ
நீ முறைத்தால் நான் ஓடிடுவேனோ
நீ ஆயிரம் முறை திட்டிதீர்த்தாலும்
ஒருமுறை சிரித்தால் போதுமடி
சிறு பிள்ளை போல
உன் பின்னே ஓடி வருவேன்...
என் உயிரே என் உடல் உயிரென நீ வேண்டும்
கண்ணாலா...
என் மூச்சே என் மூச்சிலும் நீ வேண்டும்
அழகா...
கள்வா உன் காதல் அன்பில் நான் மூழ்கிட வேண்டும்
நிரந்தரமாய்...
கண்ணா என் விழி மெளனங்களில் தவித்து
நான் சொல்லாதையும் நீ செய்யினும் யுகம் யுகமாய்...
உன் முத்து முத்து சிரிப்பு வாசம் என் மூக்கோடு வீசாதா சொல்லு சொல்லு
உன் பவள பல்லு என் கண்ணம்தான் கடிக்காதா சொல்லு சொல்லு
உன் மூச்சுக் காற்று என் முந்தானை தீண்டாதா சொல்லு சொல்லு
உன்னுடைய கோவத்தை என் கள்ள சிரிப்பு விழுங்காதா சொல்லு சொல்லு
உன்னோடு நான் ஒன்னா ஒன்றாகுனும்
என் கண்ணுக்குள்ள உன்னை வச்சி காக்கணும் ஏன் கண்ணா…
என் உயிரே உன் உடல் உயிரென நான் இருப்பேன்
அன்பே...
என் மூச்சே உன் மூச்சிலும் நான் இருப்பேன்
அழகே...
நிலவே உன் காதலில் நான் உறங்கிட வேண்டும்
நிரந்தமாய்...
கண்ணே உன் விழிமொழியினை அறிந்திட வேண்டும்
யுகம் யுகமாய்...
தள்ளித் தள்ளி தூரம் போகாதே
உன் அனலில் நொடிகளும் சுகமே...
உன் ஒத்த சொல்லில் என் உயிர் செழிக்காதா-மீண்டும்
ஒருதரம் உன் காதல் சொல்லு புள்ள…
என் கண்ணோடு நீ பேசும் ரகசியங்கள்
உன் மனதோடு நான் பேசும் ரகசியங்களேல்லாம்
யாரும் அறியா காதலாய் நம் காதலும் வாழும் வரலாற்றில்
என்னோடு நீ வா பெண்ணே…
என் உயிரே என் உடல் உயிரென நீ வேண்டும்
கண்ணாலா...
என் மூச்சே என் மூச்சிலும் நீ வேண்டும்
அழகா...
கள்வா என் காதல் அன்பில் நீ மூழ்கிட வேண்டும்
நிரந்தரமாய்...
கண்ணா என் விழி மெளனங்களில் தவித்து
நான் சொல்லாதையும் நீ செய்யினும் யுகம் யுகமாய்...
உன் மூச்சோடு
என் மூச்சின் சங்கமத்தை தடுத்திடும்
நொடிகள் அனைத்தும்
மரணம் எயித சாபம் இடுகின்றேன்
உன்னோடு ஒன்றாக ஒன்னா போக
நெஞ்சோடு நெஞ்சம் சாய்ந்து
காதல் சொல்ல...ஆனந்தமே...
என் கண் பார்க்கும்,குரல் கேட்கும் தூரத்திலும்
நீ இருந்தால் அங்கு நான் சுகம்தான்…

-அ.பெரியண்ணன்

எழுதியவர் : அ.பெரியண்ணன் (14-Oct-16, 9:52 am)
Tanglish : neeyum naanum
பார்வை : 208

மேலே