கொள்கையாய்க் கொள்க

​வளைந்த முதுகில் சுமந்திடும் பாரம்
முதிர்ந்த வயதில் வற்றாத உழைப்பு !
ஓடிடும் குருதியில் குன்றாத மனவுறுதி ​
வாடிய​ முகத்திலும் வாடாத வாழ்க்கை !
தள்ளாடும்​ நிலையில் முன்னேறும் முறை
வாழ்ந்திடும் மூதாட்டி திகழும் முன்மாதிரி !
வளரும்​ தலைமுறைக்குப் பாடமான காட்சி
​தளரும் நெஞ்சங்களுக்கு இப்படமே சாட்சி !
​நோக்கும் மனங்களே கருணையுடன் காண்க
வாக்கும்​ அளித்திடுக கொள்கையாய் கொள்க !
​வாழும்வரை உதவிடுக வாழ்ந்ததின் பயனாக
​முதியோரை கைவிடாது மதித்திடுக அன்புடனே !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (15-Oct-16, 9:24 am)
பார்வை : 1013

சிறந்த கவிதைகள்

மேலே