அம்மா

பிறக்கும் முன்னே
நேசித்த அவளின்
தூய்மையான அன்பு
கிடைக்க என்ன தவம் செய்தேனோ...

பிறந்த உடனே எனை பார்த்து
எல்லா வலிகளையும்
மறந்து புன்னகைத்த
உதடுகள் காண என்ன தவம் செய்தேனோ...

அழுதால் போதும்
அரை நொடியும்
தாமதிக்காமல் வந்து
ஆற்றுபடுத்துவாள்.....

மொழி அறியும் முன்னே
என் மனம் அறிந்து
நடக்கும் உன் குணம்
முன் தோற்று போனேன்....

என் ஒரே முகத்தை
எப்படி சலிக்காமல்
கொஞ்சி கொஞ்சி
மெய் சிலிர்க்கும் இரகசியம்
கண்டு வியந்தே போனேன் ....

பள்ளி பருவம் அதில்
பள்ளி கிளம்புகையில் உன்னை
பாடாய் படுத்தினாலும்
என் வரவை எதிர்பார்த்து காத்திருக்கும்
நீ என் வாழ்க்கையின் வித்து ....

இனி என்ன நேர்ந்தாலும்
நீ தானே என் சொத்து...

நீ அன்புட்டி கொடுக்கும்
இரசம் சாதம் அதில் நெய்மணக்கும்...

உன் மடி சாய்ந்தால்
உலகம் அது மறந்து போகும் ....

அம்மா நீ என் பக்கம் இருந்தால்
உலகம் என் வசப்படும் ...

எழுதியவர் : கிரிஜா.தி (7-Nov-16, 8:31 pm)
Tanglish : amma
பார்வை : 495

மேலே