அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

குழலிசை மயங்கிக் கேட்டேன்
----- குவலயக் கண்ணன் நின்றான் .
மழலையின் வடிவம் கண்டேன்
------ மனத்திலே பதித்துக் கொண்டேன் .
அழகனா மவனைக் கண்டே
------ அனுதினம் துதித்துப் பாடச்
சுழன்றிடு முலக மென்னைச்
------- சுற்றியே பார்க்கும் தானே !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (8-Nov-16, 6:05 pm)
பார்வை : 40

மேலே