தினமணி கவிதைமணி தந்த தலைப்பு வழி தவறிய பயணங்கள் கவிஞர் இரா இரவி

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

வழி தவறிய பயணங்கள் ! கவிஞர் இரா .இரவி !

இளைய தலைமுறையில் பலரின் பயணங்கள்
இன்று ஆனது வழி தவறிய பயணங்கள் !

கற்கும் வயதில் மது குடிக்கும் கொடுமை
கேடு தரும் மதுவை விரும்பி நாடும் அவலம் !

குடி குடியைக் கெடுக்கும் என்பதை படித்துவிட்டு
குடிக்கும் படித்தவர்கள் திருந்துவது என்றோ ?

என்றைக்காவது என்று தொடங்கிய பழக்கம்
என்றும் வேண்டும் என்றான இழிநிலை !

நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டம்
நாளும் மது அருந்துவதில் தொடங்குகின்றது !

அடி தடி சண்டை வந்து கடைசியில்
அன்பு முறிந்து நண்பன் பகைவனாகின்றான் !

காவல் நிலையம் வரையில் வழக்குகள் சென்று
காப்பாற்றப் பெற்றோர் வரும் நிலை வருகின்றது !

சனி ஞாயிறு மட்டும் என்று என்கின்றனர்
சதா குடி என்று மாறி விடுகின்றனர் !

உலக அளவில் இளைஞர்கள் அதிகம்
உள்ள நாட்டிற்கு குடியால் கேடு வந்தது !

மது குடிக்கும் காட்சிகள் இல்லாத
திரைப்படங்களே இல்லை என்றானது !

மது மறந்த இளைஞனுக்கும் இந்த
மட்டமான காட்சிகள் நினைவூட்டுகின்றன !

குடி விற்பனை இலக்கு ஏன் எட்டவில்லை என்று
கேட்டதற்கு கடைக்காரர் சொன்னாராம் !

பொறியியல் கல்லூரி விடுப்பில் உள்ளது
திறந்ததும் எட்டி விடுவேன் என்றாராம் !


மாணவரே இளையோரே சாதிக்க பிறந்தவர்கள்
மதுவிற்கு அடிமையாகி வாழ்வை இழக்கலாமா ?

உடலுக்கும் உயிர்க்கும் கேடு தரும் மது வேண்டாம்
உனது எதிர்காலம் சிதைக்கும் மது வேண்டாம் !

உங்களுடைய இலக்கை அடைய வேண்டுமானால்
உங்களின் பயணப்பாதை சரியாக இருக்க வேண்டும் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (8-Nov-16, 10:07 am)
பார்வை : 54

சிறந்த கவிதைகள்

மேலே