ஒரு காதல் விண்ணப்பம்

இனியவளே !
கல்லிலே
வார்த்தெடுத்த சிற்பமாய் !

வண்ணங்கள் குழைத்தெழுதிய
ஓவியமாய் !

வார்த்தைகள்
வரிசைப்படுத்திய
கவிதையாய் உன்னை
வர்ணித்து உன்
சுயத்தை சூறையாட
எனக்கு விருப்பமில்லை !

ரதியழகாய் நீ
வர வேண்டாம்,
அதற்கு நான்
மன்மதனுமில்லை
அவ்விதமாகும்
எண்ணமும் எனக்கில்லை !

காதலிப்பதாய்
காலம் கரைப்பதில்
எனக்கு உடன்பாடில்லை !

இன்றைய இயந்திர வாழ்வு
மனதால் மட்டுமல்ல !
பணத்தாலும் ஆனது !

காலம் எதற்காகவும்
யாருக்காகவும்
காத்திருப்பதில்லை !

அனுபவமே அடிப்படையாய்,
அறிவே ஆதாரமாய்,
முயற்சியே மூலதனமாய்,
உழைப்பே ஓர் நோக்கமாய்
வாழ்ந்து, வாழ்வெனும்
வார்த்தைக்கு புது
இலககணம் வகுப்போம் !

நேற்றைய நினைவுகளோடு,
இன்றை இயன்றவரை
பயன்படுத்தி நாளை
நமதாக்கிட, இந்த
நிமிடத்தையும்
சேர்த்தே அர்த்தப்படுத்திட
எழுந்து வா என்னவளே !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (11-Nov-16, 10:28 am)
பார்வை : 80

சிறந்த கவிதைகள்

மேலே