ராத்திரி

ராத்திரிகள் எனக்கு அற்புதமானவை..
அதிலும் அமானுஷ்யங்கள் சூழ்ந்த இரவுகள் என்றால் ஆனந்தம்..

அகாலங்கள் கடந்த பின்னிரவில் ஆவர்த்தன மூச்சுவெளிகளின் இடுக்கில், அகிம்சையான கனவுகள் மட்டும் என் உடலை புடைசூழ்ந்துகொள்ளும்..

ஆழ் மனதின் நினைவுகள் என்னை ஒரு போதும் தொல்லை செய்வதில்லை..
ஆனால், என் அறையின் கதவுகள் அப்படியில்லை..
நட்ட நடுச்சாமத்தில் பட படக்கும்..
யாரோ கொலை வெறியில் தட்டுவார்கள்..
தாழ்பாள் கழன்று விடுமளவு தட்டுவார்கள்..
பதறியடித்து திறக்கும் போதுதான் தெரியும்..

அங்கே நிற்பது என் வாழ்க்கை..

கண்களில் நீர் வடிந்தோட.. உச்சந்தலையிலிருந்து இரத்தம் சொட்ட சொட்ட..
கிழிந்து போன பழைய சட்டையுடன், ஓட்டை அரைக்காற்சட்டையோடு..
தலை கலைந்து.. நிலை குலைந்து.. பரிதாபமாய் என்னை முறைத்துக்கொண்டு தேம்பி அழும்..

அப்போது நினைத்துக்கொள்வேன் யாரோ புரட்டிஎடுத்திருக்கிறார்கள்..

"தேவயா ஒனக்கு இது.. உள்ள போய் பேசாம படு"

எழுதியவர் : றிகாஸ் (17-Nov-16, 8:13 pm)
சேர்த்தது : றிகாஸ்
Tanglish : raathri
பார்வை : 169

சிறந்த கவிதைகள்

மேலே