இரவின் மடியில்

ஊரார் உறங்கிடும் இரவது
உள்ளம் விழிக்கும் வேளை !
மோகம் பிறக்கும் வேகமுடன்
அணைக்கத் தூண்டும் அன்புடன் !
கனவில் நினைப்பாள் காதலியும்
காதல் பொங்கிட காதலனையும் !
நினைவில் நடக்கும் நிச்சயமாக
கணவன் மனைவியின் தழுவலும் !
கட்டிபிடிப்பாள் தாயோ சேயையும்
கனிவுடன் கண்மணியை பாசமுடன் !
கவிஞர்கள் பற்றிடுவர் கற்பனைகளை
கவிதைகள் வடித்திட அமைதியுடன் !
பழனி குமார்