கனவுகள் மெய்ப்படும்

ஏன் கனவே கலங்குகிறாய் ?
நீ சிதைந்துவிட்டதை நினைத்தா
இல்லை
நான் சிதைக்கப்பட்டதை நினைத்தா
கவலை வேண்டாம் .....

நம் காயத்திற்கு
காலம் மருந்திடும் வரை
காத்திருக்கலாம் ....
என்னில் தன்னம்பிக்கை
குறையாதவரை நீ காத்திருக்கலாம் ..

தாமதமாக கிடைக்கும்
நீதி வேண்டுமானால்
அநீதியாகலாம் ...
தாமதமாக கிடைக்கும்
வெற்றி என்றும்
தோல்வியாகாது.....

உன் தோல்வி
உனக்குள் வெற்றிபெறவேண்டுமென்ற
வெறியையும் வேட்க்கையையும்
விதைத்து கொண்டேயிருக்கும் ...

விடியாத இரவுகள் இல்லை
வளையாத நாணல் இல்லை
முடியாத பாதைகள் இல்லை
முயலாமல் இருந்தால்
நீ மனிதனே இல்லை ....
முயற்சி செய் மூச்சிருக்கும் வரை ...

ஏமாற்றங்கள் தான்
உன் வாழ்வில் புதிய
மாற்றங்களை கொண்டுவரும் ..
முன்னேறியவர்கள் எல்லோரும்
முயற்சி செய்தவர்களேயன்றி
முடங்கிக்கிடந்தவர்கள் அல்ல ..

நீயும் விடாமுயற்சி செய்
முன்னேறுவாய் ..
உன்னை காயப்படுத்தியவர்களை
மன்னித்துவிடு ..ஆனால்
காயங்களை மறந்துவிடவேண்டாம்
அந்த தழும்புகள்தான் உன்னை
உசுப்பேத்திக்கொண்டிருக்கும்..
நீ வாழ்ந்து காட்டவேண்டியவன்
என்ற வேள்வியை உன்னில்
விதைத்துக்கொண்டிருக்கும் ....

நேற்று நீ ஏமாற்றப்பட்டிருக்கலாம்
இன்று நீ தோற்றுப்போயிருக்கலாம்
முயற்சி செய்
நாளை உன்வசமே
அதை உனதாக்கி கொள்ள புறப்படு ..
உன் கனவுகள் மெய்ப்படட்டும்....

எழுதியவர் : மோனிஷா.A (23-Nov-16, 12:38 pm)
சேர்த்தது : அ மோனிஷா
பார்வை : 1457

மேலே