ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படிக்காமலே ஆசிரியரானது
குழந்தை
விளையாட்டில் !

தட்டிக் கொடுத்து
தூங்க வைத்தது குழந்தை
பொம்மையை !

குழந்தை இல்லாத வீடு
நிறைந்து இருந்தன
பொம்மைகள் !

வருந்தினேன்
பார்த்தபோது
பல்லியின் வாயில் பூச்சி !

நிறுத்தியது கத்துவதை
பாம்பின் வாயில்
தவளை !

முடிவுக்கு வந்தது
மீன் வளர்க்கும் ஆசை
ஒவ்வொன்றாய் இறந்தன !

குளத்தில் உள்ள நிலவை
கடித்துத் தோற்றன
மீன்கள் !

சின்ன மீனை உண்ட பெரிய மீனை
உண்டான்
மனிதன் !

புழு வைத்து மீன் பிடித்து
உண்ட மனிதன் மாண்டதும்
உண்டது புழு !

சிலந்தி வலை
விழுந்தது பூச்சி
மகிழ்வில் சிலந்தி !

மனமில்லை
மழை ரசிக்க
பசி !

கறுப்புப்பணம் ஒழிப்பதாகச் சொல்லி
ஒழித்தனர் வெள்ளைமன
மனிதர்களின் வாழ்வை !

அன்பே சிவம்
கையில்
சூலாயுதம் !

போய் சொன்ன வாயுக்கு
போசனம் கிடைத்தது
சோதிடர் !

எல்லை தாண்டி
கண்டிப்பதாகக் கடிந்தனர்
இளையோர் !

நனையவில்லை மழையில்
மேகத்துக்கு மேல் !
பறந்த பறவை

நகரும் மரங்கள்
உண்மையில்லை
தொடர்வண்டிப் பயணம் !

சிறிதாகவே தெரியும்
காணும் யாவும்
உச்சத்தில் இருந்தால் !

சுருக்கச் சுருக்க
பொருள் விரியும்
ஹைக்கூ !

எழுதியவர் : வாழ்க்கை (28-Nov-16, 2:24 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 146

மேலே