பகற்பெய்யார் தீயினுள் நீர் - ஆசாரக் கோவை 33

ஒரு விகற்பக் குறள் வெண்பா

பகற்றெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
பகற்பெய்யார் தீயினுள் நீர்! 33

- ஆசாரக் கோவை

பொருளுரை:

பகற்பொழுதில் தெற்கு நோக்காமலும், இரவில் வடக்கு நோக்காமலும் இருந்து மலசலங் கழிப்பார்; பகற்பொழுது தீயில் நீரூற்றி யவிக்கார்.

கருத்துரை: மலசலங் கழிப்பவர் பகலில் தெற்கு நோக்கியும், இரவில் வடக்கு நோக்கியும் இருந்து கழித்தலாகாது.

தீ - ஓமத்தீ, வேள்வித்தீ;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Oct-25, 9:08 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே