நகைச்சுவை-சிந்திக்க, சிரிக்க

சோமு : (கிராமத்து பள்ளி மாணவர்கள் சிலருடன்
கையில் அட்டையில் எழுதிய "தமிழ்
வாழ்க, தமிழர் வாழ்க " பலகையும் கையுமாக )
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா

என்று பாடி வந்து அங்கு உள்ள திருவள்ளுவர்
சிலைக்கு மாலை போட்டு , மாணவர்களுக்கு
மிட்டாய் கொடுத்து அனுப்புகிறான்.அப்போது அங்கு
ராமு வருகிறார்..............
உரையாடல்..................

ராமு : டேய் ராமு, என்ன இது ஒன புது அவதாரம்
எப்போ டீச்சரா மாறின , என்ன திடீர் தமிழ் பற்று
என்னடா இது.......................

சோமு : எனக்குள் தமிழ் பற்று எப்போதும் உண்டு அண்ணே
போகரை போக்க பாத்தா தமிழர்களே தமிழை
மறந்து விடுவார்களோனு தோணிச்சு.............
அதான் என்னால முடிந்தது நம்ம ஊர் பிள்ளைகளாச்சும்
தமிழ் பற்று உள்ளவர்களாய் வளரனும்,வாழனும், தங்கள்
குழந்தைகளை வழவெக்கணும், நம்ம தமிழும் வாழ்வாங்கு வாழனும்
அண்ணே ...................
ஹீ..............ஹீ.....................ஹீ............. எப்படி அண்ணே
என் ஐடீயா .............இனிமே பிரதி ஞாயிறு இவங்களுக்கு
எனக்கு தெரிந்த தமிழ் சொல்லித்தருவேன் அண்ணே.......

டேய் பசங்கள சொல்லுங்கோ பார்ப்போம்
" தமிழன் என்று ஓர் இனம் உண்டு
தனியே அவர்கோர் குணம் உண்டு
அமுதம் அவர்கள் மொழியாகும்
அன்பே அவரது வழியாகும் "
பசங்க அமைதியா பாட எங்கும் தமிழ்மணம் ..................

ராமு : சோமு நீ அறிவி ஜீவி டா ராமர் பாலம் கட்டச்சே அணில் செய்த
உதவிபோல நீ தமிழுக்கு செய்யும் உதவி............ ஆனால் இது போல்
பலர் செய்யின் தமிழுக்கு தமிழே உயிர் ஆகிவிடும்.............அல்லவா !!!!

வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழர் (எல்லோரும்)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Dec-16, 6:51 am)
பார்வை : 439

சிறந்த நகைச்சுவைகள்

மேலே