வாழ்த்து

பூவைச் சூழும் தேனீயாய்
இவர் பதிவைச் சூழும் பாவைகள்
மஞ்ஞை ஆடும் காட்சியாய்
இவரை மனதில் பதித்த மங்கைகள்
பெண்கள் வியக்கும் பாடல் பல
பக்குவாய் படைத்தளித்தார்
கண்ணின் உள்ளே காந்தத்தைக்
கன்னியாய் ஒளித்து வைத்தார்
கடல் போல் நீளட்டும் உம் அகவை
குழவி அண்ணன் ஊர் முகவை
ஆல் போல் செழிப்பாய் நீ வரவே
நலம் மட்டும் நீயுடுத்து என்னுறவே
வாழ்த்து சொல்லும் வயதில்லை எமக்கு
முன்னோர் சொன்னது பலிக்கட்டும் உமக்கு.
வாழ்க நலமுடன் வளமுடன்.......

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (4-Dec-16, 1:37 pm)
Tanglish : vaazthu
பார்வை : 12805

மேலே