நீ வருவாயென

நீ வருவாயென....

பேசியதே பேசியிருப்போம்
பேசப்படாமலே முடித்திருப்போம்
பேசப்பட்டதும் பேசப்படாததாய்
இருந்திருக்கும்.
ஆனாலும்,
நாம் பேசினோம்.

மனக் கிடங்கில்
நிரம்பியுள்ள ஆசைகள்
தொண்டைக்குள் சிக்க
தப்பித்தவை மட்டும்
வாய்வழி கசிகிறது
வார்த்தையாக.
நாம் பேசினோம்
யோசித்து.

,
சிறைபட்ட வாசகத்தை
விடுவிக்க எண்ணி
கவிதை வடிக்க
எடுத்தேன் எழுதுகோலை.
நடுங்குகின்றன விரல்கள்
நரம்புத் தளர்ச்சியால்
பாதித்தது போல.

என் செய்வேன்?
எப்போது வரப்போகிறாய்
நானும் நீயும்
நாமுமாகிப் பேச.
வரவேற்பேன் நிச்சயம்
நீ. வரும்
பாதைச் சாலையாய்
கிடந்து.

மீனாகோபி.

எழுதியவர் : மீனாகோபி (8-Dec-16, 1:38 pm)
சேர்த்தது : Meena gopi
Tanglish : nee varuvaayena
பார்வை : 89

மேலே