தலைவியின் வாழ்க்கை

எதிரில் இருக்கும்
எதிரியை எதிர்த்தாய்
உள் இருக்கும்
துரோகியை மறந்தாய்
உன் இறுதியில் அழுதவன்
எதிரியாய் நீ நினத்தவர்கள்தான்
அன்புக்குள்ளவர் என்று நினைத்தவர்கள்
கண்கள் களங்ககூட இல்லையே !!!
ஏன் இந்த துரோகிகளை நம்பி
பொறுப்பை விட்டாய்.....
உன் கண்ணசைவுக்கு
கட்டுப்பட்ட கூட்டம் கொண்ட
அன்பு எங்கே....
ஏமாந்தது நீயா? இல்லை நாங்களா?
புரியவில்லை சொல்லி செல்ல
மறுபிறவி எடுப்பாயா???
எங்களுக்கு அரசியலின் கதை
தெரியாது இருந்தும் - உன்
உடல் கண்டு கலங்கினோம்.....
கடைசி நிமிடமும் இவர்களுடன்
உங்கள் வாழ்க்கை....

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (8-Dec-16, 7:18 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
பார்வை : 178

மேலே