விதிமுறையில்லா விளையாட்டு

அகதிகள் வாழ்வோ
சகதியாய்ப் போய்
செந்நிற விழிகளால்
செங்குருதி வழிகிறதே....!

மேற்கில் நிற்கும் சிவப்புச்சூரியன்
மறைய மறுத்து மகிழ்ச்சிக் கூத்தாடுவது போல்
தமிழரின் உணர்வுகளில்
சந்தோசம் காண்கின்றனர்
இனவாத பேய்கள்...!

நிழல் தரும் மேகங்களாய்
வாழ்ந்த நல்உள்ளங்களோ தவிக்கின்றன
ஆறுதல் கூற யாருமின்றி...!


தடுமாறிய அவர்கள் வாழ்வு
தடம் மாறிப் போகிறதே
கவலைகளால்....!

அவர்கள் வாழ்வோ நிரம்பியுள்ளது குறையா நெளிவு சுழிவால் .....!

பாதுகாப்பற்ற வாழ்க்கையோ
துரத்துகிறது அவர்களை....
இந்த பொல்லாத துன்பம்
இல்லாது போவது எப்போது...?

கண்ணீர்த்துளி போன்ற இந்நாடு கண்ணீரில் நீந்தும் காலம் எதுவரை?
விடைகாண வினாவொன்றாய்...!

ஆட்சியாளர்களோ
கட்டவிழ்த்து விடுகின்றனர்
வன்முறைகளை....!
பெண்களோ வீதியில் நடமாட முடியாது முடங்குகின்றனர் வீட்டுக்குள்.....!

ஈழப்போர் முடிந்தும்
எண்ணிலடங்கா துயரச்செயல்கள் தொடர்ந்து செல்கின்றது ஈழமண்ணில்...!

ஈழத்தமிழர்களின்
வாழ்வோ தொடர்கிறது
விதிமுறையில்லா விளையாட்டாய்......!

எழுதியவர் : சி.பிருந்தா (14-Dec-16, 2:10 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 45

மேலே