வாழ்வு வரமாகும்

பட்ட மரம்கூட
விறகாகும் !

முதிர்ந்த இலைகூட
உதிர்ந்து சருகானால்
உரமாகும் !

செத்த மீன்கூட
உணவாகும் !

அண்ட சராசரமும்
ஆளும் ஆறறிவு மனிதா
உன் வாழ்வு எப்போது
வரமாகும் ?

தன்னலத்தை
தலைமுழுகி,
பிறர் நலனை
பேணிக்காத்து
உலகிற்கு நட்போடு
தோள் கொடுத்து
காதலுடன் கைகோர்த்து
பரிவோடு வாழ்ந்து வா!

உன் வாழ்வும்
ஒளி வீசும் !
வானம் வசப்படும் !

வாழும்போதே
சொர்க்கம் தெரியும் !

வாழ்வு வரமாகும் !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (17-Dec-16, 2:24 pm)
Tanglish : vaazvu varamaakum
பார்வை : 78

மேலே