எழ மனமில்லையா தோழா

என்ன தோழா!
எழ மனமில்லையா?
எத்தனை நாட்கள் தான்
வீழ்ந்தே கிடக்க போகிறாய்!

உன்னை பறக்கச் சொல்லவில்லை
ஓடு!
ஓடிக்கொண்டே இரு!
ஓட முடியவில்லையா?
நட!
உன் இலக்கை நோக்கி நட!

ஓடுபவன் விரைந்து
இலக்கைத் தொட்டால்
நடப்பவன் நீயும்
நிச்சயம் தொட்டுத் தானே ஆக வேண்டும்.

ஓடினாலும் நடந்தாலும்
இலக்கு என்பது ஒன்று தானே!
நடந்தால் நீயும்
வெல்வது உறதி தானே!

முடவன் ஆனாலும்
கொம்புத் தேனுக்கே ஆசைப்படு!
முடங்கிட நினைக்காமல்
முயற்சியோடு நீ போராடு!

அடுத்தவரை ஒருபோதும்
ஓப்பீடு செய்யாதே!
உன் ஆற்றல் அறிந்து
மன உறுதியோடு செயல்படு!

பிறந்தோம் இறந்தோம்
என்பதல்ல வாழ்க்கை
இறக்கும் முன்னாவது
இலக்கை அடைந்து விட்டுப் போ!

வெற்றியாளனாய் எவரும்
பிறந்திடவில்லையே!
பிறந்த பின்பு தானே
வென்றிருக்கிறார்கள்!

நீயும் அப்படி தானே
பிறந்திருக்கிறாய்!
பின்பு ஏன்
வீணாய் வருந்துகிறாய்!

கடந்ததை நினைத்து
வருந்தி பலன் இல்லை
கவலையை விட்டெறிந்து
கடமையோடு செயல்படு!


த.மணிகண்டன்.........

எழுதியவர் : தங்கமணிகண்டன் (17-Dec-16, 6:10 pm)
பார்வை : 109

மேலே