பிரிவின் வலிகள் - சகி

மேகங்கள் போல
அவன் கனவு காதல்
கலைந்தாலும் வெண்மேகத்தின் வெண்மை
போல பரிசுத்தமானது .....

அவன் காதலின்
ஆழம் அவளிடமிருந்து
விடைபெறும் தருணத்தில்
அவன் விழிகளில் வழியும்
கண்ணீர்துளிகளில் அவள் உணர்ந்து சென்றாள்.....

அவள் தன்காதலையும்
தன்மனதையும் தன்னவனுக்கு
சொந்தமாக்கிவிட்டேன் என்பதை அவனுக்கு உணரவைத்தாள்.......

அவளை உணர்ந்து
அவ்விடத்திலிருந்து வலிகளுடன் விடைபெற்றான்....

அவன் கண்ணீர்விழிகளின்
முகம் இவள் ஆழ்மனதில்
பிம்பமாய் என்றுமே ....

எழுதியவர் : சகிமுதல்பூ (18-Dec-16, 12:05 pm)
பார்வை : 1144

மேலே