கிமு வில் இருந்து நாம் கிபிக்கு வந்தோம்

அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
- மிக்ஸி வந்தது;

ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
- கிரைண்டர் வந்தது;

உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
- குக்கர் வந்தது;

விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
- கேஸ் அடுப்பு வந்தது;

வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
- மசாலா பொடி வந்தது;

பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
- பிரிட்ஜ் வந்தது;

மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
- வீடியோ கேம் வந்தது;

பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
- டி.வி. வந்தது;

இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..

முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

1. சர்க்கரை நோய் வந்தது
2. இரத்தகொதிப்பு வந்தது
3. புற்றுநோய் வந்தது
4. மாரடைப்பு வந்தது
5. ஆஸ்த்துமா வந்தது
6. கொழுப்பு வந்தது
7. அல்சர் வந்தது

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (19-Dec-16, 10:31 pm)
பார்வை : 368

மேலே