புயல் மழையே போ வான் மழையே வா

இயற்கை நிரந்தர
சாயத்தை பூசியுள்ளது
கற்பகோடி ஆண்டுகளாய் -அதன்
நிறம் அரியணையை விட்டு
அகன்றதாய் அகவும்
மயில் பகன்றதில்லை ....
ரசனை அற்ற இதயங்களை
ரசிகனாக மாற்றவும் நீ
தவறியதில்லை ....

******* ******* ****** ********

உலகத்தில்
வெள்ளெமென உண்டு
ரசிகர் கூட்டம் உனக்கு ....
வெள்ளத்தில் மூழ்கிய
ரசிகர்களும் உண்டு உனக்கு...
சாட்சிக்கு
"வர்தா" வை கூண்டில் ஏற்ற
வேண்டாம் என்றெண்ணுகிறேன் .....
கூத காற்றை கண்டால் கூட-இன்று
கூரை பயம்கொள்ளும்
ஆகையால்தான் ......

*********** ********** ************ *********

ஆமாம்,
அன்று தேனீக்கு சேதி
சொன்னது யார் ?
நடனிக்கும் மயிலின் நடையை
மாற்ற சொன்னது யார் ?
உள்நாட்டு வலசை பறவையின்
உள்ளுணர்வை உசுப்பிவிட்டது யார் ?

பறவை வர்க்கத்திற்கு
புயலுக்கும்-மழைக்கும் பெயர்
சூட்டத் தெரியாது -ஆனால்
புரிந்துகொள்ள தெரியும்……
புலம்பெயரத் தெரியும்……..

******* ******** ******** ********

ஆனால்
நம்
மனித வர்க்கத்தில்
பட்டறிவு வர்க்கம்
பெய்தொழிந்த மாரியில்
சேதமான லாரியையும்
அறுபட்ட மின்சார கம்பிகளையும்
சம்சார தம்பதிகளையும்
இடிந்து போன கட்டிட காடுகளையும்
மடிந்து போன விவசாய மேடுகளையும்
கணக்கெடுத்து கொண்டிருக்கிறது .......

********* ********** ********** *********

நம்
மனித வர்க்கத்தில்
பாமரவர்க்கம்
இடர்பாடுகள் கடந்து
இரண்டுநாள் கழிந்து
தேநீர் கடை வாசலில்
பேசிக்கொண்டு
தெம்பை கூட்டிக்கொண்டு
'இனி கஷ்டம்தான் ' என்று
ஆன நஷ்டத்தை கணக்கெடுக்கிறது ......

********* ********** ********** *********

நம்
மனித வர்க்கத்தில்
ஊடக வர்க்கம்
சேதாரத்தை ஆதாரமாக்கி
ஆதாரத்தில் ஆதாயம் அடைய
அங்குமிங்கும் அலைந்து
ஒளிஒலி காட்சியை பதிவுசெய்கிறது ....
********* ********** ********** *********
நம்
மனித வர்க்கத்தில்
விவசாய வர்க்கம்
காய்ந்து போன நிலத்தில்
மாய்ந்து போன பயிர்கள்....
சாத்தி எடுத்த மழையில்
சாய்ந்து போயின ....
அவர்கள் நிலப்பயிர்கள் போலவே
வாடியே, வயிறு நிரப்புகிறது ....

********* ********** ********** ***********
நம்
மனித வர்க்கத்தில்
அரசியல் வர்க்கம்
அரசின் அலட்சியப்போக்கை
குற்றம் சொல்லி -அடுத்த
தேர்தலின் எண்ணிக்கையை
கருத்தில் வைத்து
கவலை தெரிவிக்கிறது
எதிர்க்கட்சி ....
நிவாரண நிதி கேட்டு
கடிதம் எழுதி
களைத்து போய் நிற்கிறது
ஆளும் கட்சி ......
நிதியில் பாதி யாருக்கென்று கணக்கெடுக்கிறது .....

********* ********** ********** ***********
வான் மழைச்சாரலில்
நனைகிறது நிலங்கள்
புல் வளர்கிறது தானாகவே ....
தனது,
மகிழ்ச்சியை பகிர்கிறது பூமிக்கு
பூமியில் முதல் பூ பூக்கிறது …….
வான்முகில் ரசிக்கிறது பூக்களை ….
வண்ணத்துப்பூச்சி முத்தமிடுகிறது
பூவின் இதழ்களை ........

இச்சுழற்சியில் உண்டு
மனிதர்க்கும் பங்கு ….
பிரிக்கப்பட்ட வர்க்கத்தில்
வணிகம் மட்டுமே சுழல்கிறது
வானவில் நகைக்கிறது-நம்
வர்க்கத்தை கண்டு .....
****** ****** ****** *******
மனிதா வா மாறுவோம்
மழையே மாற்றத்தை கொடு என
வேண்டுவோம் ....
உள்ளத்தால் கூடுவோம்
உணர்வுகளாய் வாழுவோம்
உள்ளுணர்வில் மெருகேறுவோம்
ஆம்,
வாழக்கை உணர்வுக்கு –
மட்டுமே சொந்தமானது
வான்மழையே வா -என
வாழ்த்துவோம் வா !!!.........
****** ****** ****** ******

எழுதியவர் : கார்த்திக் -திருநெல்வேலி (24-Dec-16, 10:02 am)
பார்வை : 294

மேலே