நீ
என்
அன்பு அதட்டல் நீ ....
ஆசை முத்தம் நீ ......
இலக்கிய கவிதை நீ .....
ஈட்டியின் வேகம் நீ ....
உள்ளத்து காதல் நீ ....
ஊதாபூ மென்மை நீ....
என் வாழ்வுக்கு எல்லை நீ....
ஏகாந்த பாடல் நீ....
ஐயமில்ல பதுமை நீ.....
ஒட்டிக்கொண்ட தென்றல் நீ ......
ஓதுகின்ற வேதம் நீ.....
ஔவையின் பெருமை நீ....
மொத்தத்தில்
நான் ரசித்த தனிமை நீ....
எனை ரசிக்க புதுமை நீ....