புத்தாண்டு

வேந்தர்கள் காலத்து வென்னிறப் பனியே!
மாந்தர்கள் கண்டுனர்ந்த மாந்தரீக மழையே!!
ஆழ்கடலிலும் கிடக்காத அற்புத முத்தே!
அதிசயங்களும் ஏழேயானால் நீ தோன்றும் நாள் எட்டே!!
ஆற்றுப் படுக்கையில் நீர் தருவாயோ!
உண்ணும் சோற்றிற் குழைத்திட பெலன் தருவாயோ!!
ஏட்டுக் கல்வியை என்றும் தருவாயோ!
மனசாட்சி மனிதனுள் நிலைக்க செய்வாயோ!!
வருக புத்தாண்டே! வளம் தருக புத்தாண்டே!!
அனைவரும் புத்துணச்சி பெற வேண்டி புது சுழற்சி செய்வாயோ இவ்வாண்டு!!!
உந்தன் வருகையாலே உலகத்தவரே!
சிட்டுக்குருவியாய் சிறகடித்தோமே!!
தொட்டு தழுவவே துடித்து வந்தோமே!
உன்னதப் புத்தாண்டே உதிர்த்தெழுவாயோ !!!!!