கனவுகளை காட்டில் விட்டுவிட்ட கன்னி

என்னுடைய கனவுகள் வெறும் தாவணி கனவுகள் அல்ல ,,
தேசம் தாண்டிய கனவுகள்
கார்பொரேட் கனவுகள்
நான் கண்ணில் தினம் சுமந்த கனவுகள் ,
வெறி கொண்டு நான் வெட்டி செதுக்கிய கனவுகள் ,
பெண் என பிறந்தது போதும்
உற்றவனுக்கு உரியவளாகி விடு
என சொல்லும் என் தேசம்
இன்னும் மாற வில்லை ,,
ஆனால் கனவு காணும் அளவிற்கு
பெண்கள் மாறி விட்டனர் ,
திறமைகள் பல சுமக்கும் நங்கையாம்
தாரகத்தங்க மங்கை தேசத்து மகளிர்
வாழ்க்கை முறையை மாற்றிவிட வேண்டுமானால்
உங்களுக்கு வாய்ப்பிருக்கலாம் ,,
வாழ்ந்து காட்டும் தந்திரம் எமக்கு மட்டுமே உண்டு ,
,
இடித்துவிட்டால் இறந்து விடுவோம் என்ற
பெண்ணின் பயம் போய்
முட்டிப்பார் என எட்டிப்பார்க்கும் எண்ணம் தோன்றும் ,,
எத்தனை எத்தனை கவிஞர்கள்
பெண் சுதந்திரம் பாடி இருந்தாலும் ,,
ஏன் எதற்காக திருமணம் என்னும் முடிவு பெண்ணிற்கு ,,?
மூன்று முடி போட்ட பிறகு எழுதுகிறாள் பாருங்கள்
மணவாளனே
என் மனதிற்கு இனிய துணையாளனே,,
உனக்கு தெரியுமா நான் தொலைத்த சந்தோஷம் ,
நான் விட்டு வந்த நிம்மதி
நான் கொண்டு வந்த மிச்ச மீதம் ,,,
தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்
உன்னோடு நான் வாழ்ந்த நேரங்கள் சொல்லும்
நம் வாழ்க்கையை ,,
உனக்காக நான் விட்டு கொடுத்த பழக்கங்கள் சொல்லும்
என் உண்மையான அன்பின் ஆழத்தை ,,
என்னை உனக்கு தந்த போதே
நான் முழுமையடைந்துவிட்டேன் ,
,
மனைவி தானே என்று நீ என்னை தொட்டவுடன்
உன் கடமை முடிந்துவிட்டது
அதன் பிறகுதான் எனக்கு வேலையே ஆரம்பிக்கிறது ,,
தாய்
என்றால் வலி பொறுக்க வேண்டும்
சேய்
என்றால் பாலூட்ட வேண்டும்
அம்மா
என்றவுடன் அள்ளி அணைக்க வேண்டும்
அதற்கு நடுவில் அடியேய் என நீ சொன்னால்
என்னவென்று கேட்க வேண்டும் ..
.தலைமுறைகள் பெரிதாகையில்
தியாகங்களும் பெரிதாக வேண்டும்
அதுவும் மாமியார் என்ற முறையில் ....
என்று தான் விடியும் ,,,,
இத்தனைக்கும் நடுவில்
யாருக்கு தெரியும் என் உச்சகட்ட சோகம் என்னவென்று ,
,உனக்கும் கூட தெரியாது
அது நான் ஆரம்பித்து விட்டு கட்டி முடிக்கமுடியாத
என் கனவுகளின் கோட்டை என்று .....
அடுத்த பிறவியிலாவது ஆண்மகனாக பிறக்க ஆசை
என் மனைவியின் கனவுகளை ஆசைகளை நான் கேட்டு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ....