வருங்கால கனவுகள்

வருங் காலத்தின் எதிர்பார்ப்பே
நம்மை வாழ வைக்கின்றன..
நிகழ் காலத்தின் சேமிப்பை
வருங் காலத்தின் வரமாக்கு..

அருமை நினைவுகளைச் சேமி
சிறுசிறு நொடிகளைச் சேமி
சிரிக்கும் நிகழ்வுகளைச் சேமி
ஆழ்ந்த நல்லெண்ணங்களைச் சேமி

நல்ல நண்பர்களைச் சேமி
நல்ல உறவுகளைச் சேமி
நல்ல கவிதைகளைச் சேமி
நல்ல வாழ்த்துக்களைச் சேமி

இருக்கும் நாட்களை இதமாக்கு
பிறக்கும் பொழுதுகளை உனதாக்கு
வெறுக்கும் இதயத்திற்கும் பூவாகி
நொறுக்கும் பேர்களுக்கும் மணமாகு

கனவுகளே நம்மை நிர்ணயிக்கும்
கனவுகளே நம்மை வழிநடத்தும்
கனவுகளே நமது பெரியசொத்து
கனவுகளே நமது அறியநட்பு

கனவுகளை சேர்த்து வைப்போம்
மாடமாளிகை கட்டி வைப்போம்
அதிலும் கனவினை குடிவைப்போம்
தவறெனச் சொல்வோருக்கு அடிவைப்போம்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (16-Jan-17, 10:35 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 568

மேலே