புதிய தலைமுறை

சாகத்துணிந்த வீரனுக்கு
தடையா மறத்தமிழனுக்கு?
போடாடே மூடா தூர நீயும்
எத்தனைக்காலம் ஏமாற்ற முடியும்?

அஞ்சி அஞ்சி செத்தது போதும்
உடனே துணிந்து எழுந்து வா -நீயும்..
எல்லாத்திற்கும் முடிவு உண்டு
இன்று தமிழனாய் ஒன்றிணைந்து...

சொர்க்கமாய் இருந்த கிராமங்கள் யாவும்
ஏனோ இன்று நரகமாய் போனது..?
அது யாரால் தரிசாய் ஆனது...

தமிழனின் வீரத்தைச் சோதிக்க நினைதாய்
இதோ காட்டிவிட்டோம் நாங்கள் யாரென்று...!
சாதரணமானவர்கள் என நினைத்தாயோ...
வலிமை மிக்க இளம் மாணவர்களை...மாணவிகளை..

தானாய் வந்து தட்டி எழுப்பிவிட்டாய்
ஓய்வில் இருந்த இளைஞர்களை...
யாராலும் வெல்ல முடியாது தமிழர்களை...

தமிழன் தேவை இல்லையென்றால்
இந்தியாவிற்குள் நாங்கள் ஏன்?
அயோக்கியர்களெல்லாம் ஒன்று கூடும் போது
யோக்கியமானவர்கள் மட்டும் ஏன் ஒன்றிணையக்க்கூடாது?

குற்றம் குன்றாய் செய்துவிட்டீர்...
அதனை உடைக்க நாங்கள் துணிந்துவிட்டோம்
வெறும் நீர்க்குமிழிகளென்று இருந்துவிட்டீர்...
மாணவர்களின் உணர்ச்சி எரிமலையை ...

இன்று வெடித்ததொன்றும் பஞ்சல்ல
மாணவப் புரட்சிடா...மக்கள் உணர்ச்சிடா
இது ஒண்ணும் வம்பல்ல...
இளைஞனின் எழுச்சிடா... தமிழனின் உரிமைடா...

எத்தனை நாட்களுக்கு நீங்டா...
நாளை முதல் இங்கு நாங்டா...
எதுவும் இங்கு நிரந்திரமில்லை
சுழலும் உலகில் அறிவாய் -நாளை..

காப்பானென்று நினைத்தோம் உம்மை
இன்று நீர் களவாணியாக மாறியதால்
சும்மா விட்டுவிடுவோமோ - திருடனை

யார் செய்தாலும் குற்றம் குற்றம்தான்
மேல் மட்டம் செய்தால் மட்டும் அது எப்படி நியாயமாகும்?

அன்றை தலைவர்கள் யாவரும்
அன்னியர்களை விடரட்டி விடுதலை வாங்கித் தந்தார்கள்
இன்றைய தலைவர்கள் எல்லாரும்
தாய் நாட்டை விற்கவே முயல்கிறார்கள்...
ஏன் இந்த முரண்பாடு...?

எமனையும் எலி வுழுங்குமடா
முயலை மட்டும் விட்டிடுமா?
தன்மானத்தை விற்றுப் பிழைப்பதற்கு
நாங்கள் என்ன அரசியல்வாதிகளா?

அன்று நாங்கள் தவறு செய்துவிட்டோம்
உமது வாக்கினை மெய்யென்று நம்பி
வாக்களித்து ஏமாந்தது போதும்...
மீண்டும் அதை செய்ய மாட்டோம் ...

அரசியலில் நுழைந்தது எதற்கு?
ஏமாற்று வேலை செய்யவோ?
போட்டியில் கலந்தது எதற்கு?
வரிப்பணத்தையெல்லாம் சுரண்டவோ?

இன்றைய அரசியல்வாதிகள் மீது
நம்பிக்கையற்றுப் போனது
காரணம் அரசியலென்றாலே..
இன்று சுய நலம் ஆனது...

பெரிச்சாளிகள் மட்டும் தப்பிக்க முடியுமாம்
சட்டத்தின் ஓட்டையிலிருந்து...
அவ்வளவு பெரிய பொந்திலே
சுண்டெலிக்கு ஏனோ வழியில்லை
இது பெரும் முரண்பாடு என்றாலும்
சட்டத்தை மதிக்கிறான் ஏழை..என்பதுதான் உண்மை !

வெளியிற் சொன்னால் வெட்ககேடு
அரசியல்வாதிகளின் செயலு...
உடனே உமது தவற்றை நிறுத்து
இல்லையேல் ஒதுக்கிடுவார் வெறுத்து
சேவை செய்ய உமக்கு துப்பில்லாத போது
இனியும் சும்மா இருப்பாரோ...
நீங்கள் செய்யும் தீங்கினை வேடிக்கைப் பார்த்து கொண்டு

குற்றம் செய்யாவிடில் அச்சம் தேவையில்லை
அரசியல் செய்யாமல் அறச் செயல் செய்வோர்க்கே
இனிமேல் நாங்கள் வாக்களிப்போம்..
ஏனெனில் நாங்கள் புதிய தலைமுறை..!

எழுதியவர் : கிச்சாபாரதி (27-Jan-17, 7:58 pm)
Tanglish : puthiya thalaimurai
பார்வை : 548

மேலே