வரவேற்பு

விண்மழையை வானவில்லும் வளைந்துவர வேற்கும்
***மேளதாள மோடுயிடி முழங்கிவர வேற்கும்!
கண்பறிக்கும் மின்னலுந்தான் கவின்கோல மாக
***கார்முகிலை வரவேற்க கண்சிமிட்டிப் பூக்கும்!
மண்வாசம் முந்திவந்து வரவேற்பு தந்து
***மழைவருதற் கறிகுறியை மக்களுக்குச் சொல்லும்!
வண்ணமயில் வானத்தில் மழைமேகம் கண்டு
***வனப்புடனே வரவேற்றுத் தோகைவிரித் தாடும் ...!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (28-Jan-17, 6:58 pm)
பார்வை : 396

மேலே