தோழமைக்கு வலிமையெது?

பாசத்தை முழுவதுமாய் தருவதாகக் கூறி
பாசனத்தை என்னுடலில் ஏற்றியவென் தோழா- விசு
வாசமென்றால் என்னவென்று அறியா நீ, மூடா - என்
வசனத்தால் உன்விழிகள் இரவிலினும் மூடா

ஊனன் கண்ட கனவு மெய்க்க
உடலை வருத்தி உழைத்தோம்
உவகையோடு ஏற்றுக் கொண்டு -எமை
உதறுகையில் திகைத்தோம்

பகைத்துக் கொண்டு வாழ்வதற்கா
வாழ்க்கையென்று நினைத்தோம்
பாசத்தோடு அரவணைத்து - உன்
வேசங்களை மறைத்தோம்

கருத் துரைக்க அழைத்திடுவாய்
மறுத் துரைத்த தில்லை
மறந்து போன நாட்களுண்டு; மனம்
மரத்துப் போன தில்லை

ஆசுகவி உரைத் வர்கள்
கொண்ட தில்லை பட்டம்
ஆறுகவி புனையு முன்னே
உரைக்கிறாய் நீ சட்டம்

தோழமைக்கு நல்ல சான்று
கொடுப்ப தில்லை உயிரை
தோழனுக்கு தோழனாக
வாழ்வதே எம் வலிமை

எழுதியவர் : (5-Dec-09, 1:59 pm)
பார்வை : 713

மேலே