என் இதயத்தை திருடியவளே 555

அன்பே...

நீ விண்ணில் இருப்பதாய்
நினைத்து...

வானவில் வரும்போதெல்லாம்
பார்க்கிறேன் விண்ணை நான்...

என் வீட்டு வாழையும்
அப்படிதான் இருந்தது...

என் ஊர் திருவிழாவில்
உன்னைக்கண்டேன்...

நலம் விசாரித்தேன் திருவிழாவிற்கு
வந்தேன் என்கிறாய்...

நீ வருவாய் என்று தெரிந்ததால்
என்னவோ...

என் கிராமத்தில்
தேரோட்டம்...

உன்னை கண்டு உன் பாதம்
பார்த்து நடந்தேன் நான்...

என் வீட்டு வாழையும்
முதல் பூ கொடுத்தது...

மண்ணை பார்த்து
உன்னை காணவே...

ஊரார் காணவேண்டும்
மணமேடையில் நம்மை...

வாசலில் நின்று வாழ்த்தவேண்டும்
நம்மை அந்த வாழை...

உன் ஓரப்பார்வையில்
சம்மதம் சொல்லடி கண்ணே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (1-Apr-17, 8:08 pm)
பார்வை : 267

மேலே