கனவு

கனவு.......!

இரவில் எரியும் சந்திரன் சாட்சி,
இருளில் நடக்கும் இன்னொரு ஆட்சி -கனவு

பகலின் ஔியில் பகடை காட்சி,
இரவிலும் தொடரும் வினோத சூழ்ச்சி -கனவு

அதுமட்டுமா,

பள்ளிப் படிப்பை முடித்த பிறகும்,
மீண்டும் அழைத்திடும் பள்ளி நினைவுகள் -கனவு

நினைவுகள் எல்லாம் நிஜங்களாய் மாறி,
நம்மை தொடரும் உணர்வும் -கனவு

உணர்வை தூண்டும் கல்லூரி பயணத்தின்
கடைசிநாள் நினைவில் இருப்பதும் -கனவு

மறந்து போனவர்கள் எல்லாம் ,
நினைவில் இருக்குமிடமும்-
கனவு

ம்ம்ம்ம்ம்ம்................

படித்தவுடன் வேலை கனவு,
படிக்காதவனுக்கு வாழ்கை கனவு,

உழைப்பவனுக்கு ஊதியம் கனவு,
உழைக்காதவனுக்கு உழைப்பே கனவு.

காலை விடியலில் மறைவதும் கனவு,

நாளை விடியலுக்காக வருவதும் கனவு

நொடிகளாய் கரையும் வாழ்க்கையில்
நாமே ஒரு கனவு......!

எழுதியவர் : இளஞ்செழியன் .சு (3-Apr-17, 11:45 am)
Tanglish : kanavu
பார்வை : 324

மேலே