என் அன்பிற்கு நீ இனியவன்

என் பெண்மையில்
உன்னை விழி
மயக்க
நான் பூக்க வேண்டாம்
என் அன்பு
உனக்கு மாழையாகும்
வரமாக பூக்க வேண்டும்

உன் தாரமாக
உன் மடி நான் சாய
உன் கடிகார நேரம் எனக்கு வேண்டாம்
உன் தாயாக
என் மடி நீ சாய
என் வாழ்க்கை
உனக்கு கடிகாரமாக வேண்டும்

உன் இமை
மூடா விழிகள்
எனக்கு வேண்டாம்
என் இமை
மூடா
உன் பார்வை
தினம் தினம் எனக்கு வேண்டும்

என் விழியில்
தேங்கி நிற்கும்
என் அன்பிற்கு
கருணை வேண்டாம்
என் காலம் அழிந்தாலும்
உன் நிஜத்தில்
நான் அழியா உயிராக வேண்டும்..

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (8-Apr-17, 5:35 pm)
சேர்த்தது : கவி ரசிகை
பார்வை : 185

மேலே