கவியே வாழ்க

கவியே வாழ்க
(குறள் வெண்செந்துறை)

நாளும் பயிற்றுவித் தேயெமை பாங்குடன்
ஆளும் திறத்தினில் ஆக்கும் கவியே!

நன்றி உமக்கு நவின்றுப் பயில்கிறோம்
மன்றில் நடுவினில் மண்டியிட் டேவுவந்தே!

மகிழ்ந்து பயிலும் மதியின் திறத்தை
நெகிழ்ச்சி உரையால் நெறிப்படுத் தென்றுமே!

நாவும் இனிக்க வடித்தநல் பாவெனும்
நோவும் மறக்கவோர் நோக்கமே வாழ்கவே!

... நாகினி

எழுதியவர் : நாகினி (10-Apr-17, 12:11 pm)
சேர்த்தது : Nagini Karuppasamy
பார்வை : 92

மேலே