கவிதை உன்னை விரல்கள் தீண்டும்

வெற்றுத்தாளில் ஒற்றைக்கவிதை
எழுதினேன் !
வாக்கியம் அழகு !
வரிகள் அழகு !
கவிதையும் அழகு !
ஏனெனில் கவிதையின் "கருப்பொருள் " நீ ஆதலால்
மெல்லமாய் என் விரல்களால்
வரிகள் ஒவ்வொன்றையும் தீண்டிப்பார்த்தேன் -அது
சிணுங்கவில்லை !
சிலிர்க்கவில்லை !
சிறு சலனம் இல்லை !
வெட்கம் கொள்ளவில்லை !

ஆயினும் என்றேனும் கவிதை உன்னை
விரல்கள் தீண்டும்
வெட்கம் கொள்ளும்
சிறு சலனம் கொள்ளும்
சிலிர்க்கும் சிணுங்கும் !-அக்கணம்
என் சிந்தையும் மயங்கும் !

எழுதியவர் : வீர .முத்துப்பாண்டி (13-Apr-17, 5:10 pm)
பார்வை : 533

மேலே