எனைப் பிரியாத உறவாக வா

என்னோடு வா
என் நிழலாக வா
எனைப் பிரியாத உறவாக வா,
நெஞ்சோடு வா
என் நினைவோடு வா
என் வழியோடு துணையாக வா,
ஓடும் ஆற்று நீரில் ஒருத் துளி நான்,
உன் தாகம் தீர்க்க அலைநதியோடு எனையும் சேர்த்துப் பருகிட வா.
காணும் மரங்களில் அதோ அந்த ஒற்றைக் கனி நான்,
உன் ஆகாரமாய் ஒருமுறையேனும் எனையும் உண்டிட வா.
வானில் சிறகை விரிக்கும் கோடிப் பறவைகளில் நான்,
எங்கே ஓர் நாளேனும் ஒருமுறையாவது நான் எங்கே கண்டு பிடிக்க வா.
வானத்து நட்சத்திரத்தில் எங்கோ ஓர் மூலையில் நான்,
இந்த வின்மீன்கள் கூட்டத்தில் உன்னவளின் ஒளியைத் தேட வா.
மேகத்தின் கோடித் துளியில் ஏதோ ஒருத் துளி நான்,
உன் சிப்பிக்குள் எனைத் தாங்கி முத்தாக்கிட வா.
ஓங்கி உயர்ந்த மலைகளுக்குள் விரல் நுனித் தீண்டா பெண் பாறை நான்,
சிற்பியாய் எனைச் செதுக்கி உன் இறைவியாய் ஏற்றிட வா.
காட்டுக் குயில்களின் கீதத்தில் தனியொரு கீதம் நான்,
இந்த சின்னக் குயிலின் ராகத்தைக் கேட்டு மயங்க வா,
கண்ணோடு ஆயிரம் கனவுகள் ஒவ்வொன்றிலும் உன்னோடு நான்,
இமையோடு விலகாத மறு இமைப் போலவே தினந்தோறும் கனவாக வா,
வாழ்வின் இறுதிவரை
என்னோடு வா
என் நிழலாக வா
எனைப் பிரியாத உறவாக வா.....