இயற்கையின் விந்தையும், அகந்தையும்

இயற்கையின் விந்தையும், அகந்தையும்!
என்னவோ விந்தை,
என்னவோ அகந்தை,
இயற்கை காட்டுவது வேடிக்கை,
காண்பது நமக்கு வாடிக்கை!

காலை, மாலை வானம்,
கண்ணைக் கவரும் ஜாலம்,
காதலர் எண்ணம் போல்,
மெருகேறும் நாளும்!
இயற்கையின் விந்தை!

நீருண்ட மேகம்,
நிலவைக் கூட விழுங்கும்,
நீண்ட வில்லை வளைக்கும்,
நீலவானை போர்க்களமாய் மாற்றும்!
இயற்கையின் அகந்தை!

நீலக்கடல் ஓரம்,
நத்தைகள் ஒதுங்கும்,
ஆமை நண்டு ஓடும்,
ஐம் புலனை ஈர்க்கும்!
இயற்கையின் விந்தை!

பேரலைகள் உயரும்,
பெரிய படகை சாய்க்கும்,
பெரிய அழிவை கொடுக்கும்,
சோக கீதம் பாடும்!
இயற்கையின் அகந்தை!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (18-Apr-17, 9:51 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 157

மேலே