பெறுவோமா இந்த சுகம்

​ஆற்றங்கரை ஓரம் ஓய்வு
நவீனம் இல்லாத இயற்கை
இதமளிக்கும் மிதமான காற்று
மெத்தையிலா கயிற்றுக் கட்டில்
ஆரவாரம் நீங்கிய அமைதி
ஆளரவம் அற்ற திறந்தவெளி
இன்னிசை ஒலியுடன் குயில்கள்
வெப்பம் தெரிந்திடா மரநிழல்
மாசற்ற தூசில்லா சூழ்நிலை
விழிகள் குளிர்ந்திடும் பசுமை
இனிமை தந்திடும் தனிமை
கவலை மறக்கும் கண்ணயர்வு
கனவும் வந்திடா உறக்கநிலை
இதயம் மகிழும் இன்பநிலை
காட்சியும் காண்போமா நாமும்
மீண்டும் வந்திடுமா இந்நிலை
பெறுவோமா இந்த சுகம் ?

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (20-Apr-17, 8:54 am)
பார்வை : 320

மேலே