சுடர் விளக்கு

விளக்கினில் எண்ணெய் குறைந்து
திரியில் ஒளிச்சுடர் மங்குகிறபோது
விளக்கு அணைகிறது என்று
சொல்லமாட்டார் நற்குல மாதர் !
விளக்கு மலையேறுகிறது என்று சொல்வர்
அது மங்கல வழக்கு !


இல்லத்தில் தீபத்தில்
எண்ணெய் வார்த்து
சுடர் விளக்கினை தூண்டிவிட்டாள்
மங்கலக் குங்குமமிட்டு மல்லிகை சூடிய மங்கை !
சோதி பெருகியது இருள் விலகியது
தெய்வீகச் சூழல் வருகை புரிந்தது !
மாலை ஆராதனையின் ஆலயமணி ஓசை
காற்றில் மிதந்து வந்தது மனது நிறைந்தது !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-May-17, 9:24 am)
Tanglish : sudar vilakku
பார்வை : 187

மேலே