கொடை க் கானல் மலர்

குளிர் கொடைக்கானல் மலையில்
கோடையில் பூத்த குளிர் மலரே !
மேலாடையில் மென்தென்றல் தவழ
மெல்ல நடந்து வரும் வானத்து மேனகையே !
இதழிடையில் அசைந்து ஓடும்
புன்னகை பனி நீரோடையே !
விழிசாடையில் காதல் கவிதை சொல்லும்
தென் பொதிகைச் செந்தமிழே !
விடைபெற்று மேற்கு வானில் மாலை போகும் முன்
வாராயோ நீயும் ஒரு முறை !

எழுதியவர் : கல்பனா பாரதி (9-May-17, 9:26 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 89

மேலே