கொதிக்கும் குருதி

பட்டப் பகலிலே
வெட்ட வெளியிலே
பெற்றோர் பிறந்தோர்
கண்ணெதிரே
நீட் என்ற பெயரில்
நீலப் படம் எடுத்த
நயவஞ்சகர்களுக்கு முன்னே
நஞ்சுண்டதை போல்
நலிந்து திரும்பிய
எம் மாணவிகளுக்கு
தமிழகம்
தரப்போகும்
பதில் என்ன?

மூன்று மணிநேரத்திற்காக
மூன்று முடுச்சுகளை
அகற்றச் சொல்லும்
முட்டாள் தனம் தான்
தமது தேர்வு முறையா?

மருத்துவத்திற்காக
எம் பெண்கள்
மாங்கல்யத்தை
தியாகிக்க வேண்டுமா?
மனதற்ற மடத்தனம்.......

பொறுத்திருப்பதால்
நாங்கள் பேடிகள் அல்ல.
அமைதி காப்பதால்
யாம் உம் அடிமைகள் அல்ல....

நெஞ்சம் குமுறுகிறது;
குருதி கொதிக்கிறது;

அல்லி மலர் தொடுத்து
அலங்கரிக்கும் கரங்களுக்கு,
ஆயுதம் ஏந்திப்
போரிடவும் தெரியும்........

பாசத்தினால்
பணிந்திருக்கும்
விழிகளுக்குப்
பார்வையினால்
பஸ்பமாக்கவும்
தெரியும்......

கொழுந்து விடும்
எம் கோபாக்கினியில்
சாம்பலாகப் போகும்
சருகுகள் எத்தனையோ?
ஜாக்கிரதை .........

எழுதியவர் : குழலி (11-May-17, 1:46 pm)
Tanglish : kodhikkum kuruthi
பார்வை : 184

மேலே